திருச்சானூர் பிரம்மோற்சவ தேர் திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Dec 6, 2024 - 05:50
 0  5
திருச்சானூர் பிரம்மோற்சவ தேர் திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த நவம்பர் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, இரவு இரு வேளைகளிலும் தாயார் சின்ன சேஷம், பெரிய சேஷம், கற்பக விருட்சம் உள்ளிட்ட வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில், 8 -ம் நாளான நேற்று காலை தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. இதில் முத்து கவசத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பலர் தேரின் மீது நேர்த்திக் கடனுக்காக மிளகு, உப்பு போன்றவற்றை தெளித்து வழிபட்டனர். இதில் ஜீயர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow