திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்.24-ல் தொடக்கம்
அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்ளார். அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் வீதியுலா வருகிறார்.

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்க உள்ளார். அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் வீதியுலா வருகிறார்.
செப்டம்பர் 25-ம் தேதி காலை சின்ன சேஷ வாகன சேவையும், இரவு அன்ன வாகன சேவையும் நடைபெற உள்ளன. 26-ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பல்லக்கு வாகனம், 27-ம் தேதி காலை கற்பக விருட்சக வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 28-ம் தேதி காலை மோகினி அலங்கார சேவை, இரவு கருடசேவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
What's Your Reaction?