யுபிஐ வரலாற்றில் சாதனை: ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை
இந்தியாவில் யுபிஐ வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்லியன் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளன.

புதுடெல்லி: இந்தியாவில் யுபிஐ வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்லியன் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளன.
இது தொடர்பாக தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) புள்ளிவிவரம் நேற்று வெளியானது. இதன்படி நாட்டில் யுபிஐ பரிவர்த்தனை முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20.01 பில்லியனை எட்டியது. இது ஜூலை மாதத்தை விட (19.47 பில்லியன்) 2.8% அதிகம் ஆகும். யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.24.85 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரி தினசரி பரிவர்த்தனை 645 மில்லியனாக (ஜூலையில் 628 மில்லியன்) உயர்ந்துள்ளது.
What's Your Reaction?