தாய்ப்பால்: குழந்தைகளின் நம்பிக்கையான எதிர்காலம்!
உலக சுகாதார அமைப்பு, யுனி செஃப், சுகாதார அமைச்சகங்கள் சார்பில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப் பால் வாரம் கடைபிடிக்கப் படுகிறது

உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், சுகாதார அமைச்சகங்கள் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தாய்ப்பால், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது. இதில் கொழுப்பு, புரதம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. மேலும், ஒரு குழந்தையை நோய்த்தொற்று, அழற்சிக்கு எதிராகப் பாதுகாக்க உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர். எனவே முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இதுகுறித்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
What's Your Reaction?