தபேதார்... மொகலாயர் ஆட்சியில் இருந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது!
கிராமங்களில் வெற்றுச் சவடால் பேசி திரிவோரை, ‘ஆமாம் இவரு பெரிய தபேதாரு’ என கேலி பேசுவதுண்டு. கடந்தாண்டு, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட லிப்ஸ்டிக் சர்ச்சையால் ‘தபேதார்’ என்ற சொல் மேலும் பலருக்கு பரிச்சயமாகி, பேசு பொருளானது.

கிராமங்களில் வெற்றுச் சவடால் பேசி திரிவோரை, ‘ஆமாம் இவரு பெரிய தபேதாரு’ என கேலி பேசுவதுண்டு. கடந்தாண்டு, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட லிப்ஸ்டிக் சர்ச்சையால் ‘தபேதார்’ என்ற சொல் மேலும் பலருக்கு பரிச்சயமாகி, பேசு பொருளானது. மாவட்ட ஆட்சியர்கள், நீதிபதிகள், மேயர்கள் உள்ளிட்டவர்களின் அருகில் வெள்ளை உடையில், தலையில் டர்பன் அணிந்து நிற்பவர்தான் இந்த ‘தபேதார்’.
இவர்கள்தான் தலைமை உதவியாளர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக 4 உதவியாளர்கள் இருப்பர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், உயர் அதிகாரிகளுக்கு பணிவிடை செய்வதற்கும், அந்த அதிகாரிகள் தங்களை எஜமானர்களாக கருதுவதற்கும் இந்த தபேதார்கள் நியமிக்கப்பட்டனர். பொது இடங்களில் அதிகாரிகள் இருப்பதை தெரிவிப்பதும், பொதுமக்களை அமைதிப்படுத்துவதும் இவர்களின் பணியாகும்.
What's Your Reaction?