தடைப்பட்ட காரியங்களை நிறைவேற்றி தரும் சுயம்பு ஸ்ரீ ராம வீர ஆஞ்சநேயர்!
ஸ்ரீ ராமபிரானின் தீவிர பக்தரான அனுமனை வழிபடுவது என்பது விசேஷமானது. பழநி அடுத்து பாலசமுத்திரம் அருகேயுள்ள பாலாறு அணைப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ ராம வீரஆஞ்சநேயர் கோயில்.

ஸ்ரீ ராமபிரானின் தீவிர பக்தரான அனுமனை வழிபடுவது என்பது விசேஷமானது. பழநி அடுத்து பாலசமுத்திரம் அருகேயுள்ள பாலாறு அணைப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ ராம வீர ஆஞ்சநேயர் கோயில். கோயிலுக்கு செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. கோயிலை அடைந்ததுமே மனதில் பூரண அமைதி குடிகொண்டு விடுகிறது.
கோயிலுக்கு பின்பகுதியில் ஆயிரக்கணக்கான நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பிரம்மாண்டமான பாலாறு அணை உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை பாறையில் 8 அடி உயர சுயம்புவாக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?