சைவ - வைணவத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் மீனாட்சி திருக்கல்யாண சிற்பங்கள்!
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தன்னுயிரை காப்பாற்றியவர் மீனாட்சி அம்மன்தான் என்பதால், புது மண்டபத்தை கலை நுணுக்கங்களுடன் உருவாக்கினார். அத்தகைய புதுமண்டபத்தில் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் சிற்பங்களாக உருவாக்கி வசந்த மண்டபமாக்கினார்.

மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தன்னுயிரை காப்பாற்றியவர் மீனாட்சி அம்மன்தான் என்பதால், புது மண்டபத்தை கலை நுணுக்கங்களுடன் உருவாக்கினார். அத்தகைய புதுமண்டபத்தில் மீனாட்சி திருக்கல்யாணத்தையும் சிற்பங்களாக உருவாக்கி வசந்த மண்டபமாக்கினார். இத் தகைய புதுமண்டபத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும் சிலைகள் உள்ளன.
கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் 6 நுழைவாயில்கள் கொண்ட வசந்த மண்டபம், கிழக்கு மேற்காக 322 அடி நீளமும், தெற்கு வடக்காக 90 அடி அகலமும் கொண்டு ஒரு செவ்வக வடிவத்துக்குள் மற்றொரு செவ்வக வடிவை உள்ளடக்கியதுபோல 25 அடி உயரமுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 124 தூண்கள் மற்றும் 85 சிறுதூண்களுடனும் பிரம்மாண்டமாக அழகுடன் காட்சி தருகிறது.
What's Your Reaction?