ரோந்து - காவல் மனிதர்கள் | திரைப் பார்வை
“உங்களுடைய போலீஸ் கதாபாத்திரங்கள் நல்லவர்களா, கெட்டவர் களா?” என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. “அவர்கள் மனிதர்கள்!” எனப் பதிலளிக்கிறார் மலையாளப் படவுலகில் தற்போது ‘காவல் கதை’களின் மன்னராக அறியப்படும் கதாசிரியரும் இயக்குநருமான ஷாஹி கபீர்.

“உங்களுடைய போலீஸ் கதாபாத்திரங்கள் நல்லவர்களா, கெட்டவர்களா?” என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. “அவர்கள் மனிதர்கள்!” எனப் பதிலளிக்கிறார் மலையாளப் படவுலகில் தற்போது ‘காவல் கதை’களின் மன்னராக அறியப்படும் கதாசிரியரும் இயக்குநருமான ஷாஹி கபீர். இவரின் எழுத்து, இயக்கத்தில் உணர்வுக் குவியலாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம்தான் ‘ரோந்து’ (Ronth).
ஒரு சின்ன நகரம். பனியும் தூவல் மழையும் கைகோத்துக்கொண்டிருக்கும் கிறிஸ்துமஸ் காலத்தில் கதை தொடங்குகிறது. மூத்த காவல் உதவி ஆய்வாளர் யோஹனன், பணியில் இணைந்து ஆறு மாதங்களே கடந்த காவலர் தின்னாத் ஆகிய இருவரும் அன்றைய இரவுக்கான ரோந்துப் பணியைத் தொடங்குகின்றனர்.
What's Your Reaction?