‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!

தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Oct 6, 2025 - 16:05
 0  4
‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!

புதுக்கோட்டை: ட்ரோன் பைலட் பயிற்சி பெற்று நாட்டின் முதல் தொழில் முனையும் திருங்கையானார் புதுக்கோட்டை ஷிவானி. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆர்.ஷிவானி. திருநங்கை. பட்டதாரியான இவர், திருநங்கைகள் நலச் சங்கத்தின் செயலாளராக உள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள ரிமோட் ட்ரோன் பைலட் சென்டர் மூலம் நபார்டு வங்கியின் நிதி உதவியின் கீழ் ட்ரோன் பைலட் பயிற்சியை ஷிவானி அண்மையில் முடித்தார்.

அதன் பிறகு, தமிழக அரசின் புத்தொழில் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க பதிவு செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதி உதவி ரூ.5 லட்சம் வழங்குவதற்கான தொழில் முனைவோராக சிவானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow