விருதுநகர் மாவட்டத்தின் 150 ஆண்டு கால வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு ஆவணம் வெளியீடு
கடந்த 1800 முதல் 1950-ம் ஆண்டுவரை விருதுநகர் மாவட்டத்தின் சமூக, பொருளாதார, பண்பாடு, தொழில் முன்னேற்றம் குறித்து ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு முதன்முறையாக 540 பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்: கடந்த 1800 முதல் 1950-ம் ஆண்டுவரை விருதுநகர் மாவட்டத்தின் சமூக, பொருளாதார, பண்பாடு, தொழில் முன்னேற்றம் குறித்து ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு முதன்முறையாக 540 பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
‘விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800-1950)’ என்ற தலைப்பில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரலாற்று நூல் ஒன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வுத்துறையைச் சார்ந்த கல்லூரிகளில் இருந்து அனுபவமிக்க பேராசிரியர்களை கொண்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?