ஜப்பான் - இந்தியா இணைந்தால் புதிய தொழிற்புரட்சி: டோக்கியோ மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை

ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்தால், 21-ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று டோக்கியோவில் நடைபெற்ற இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Aug 30, 2025 - 09:40
 0  5
ஜப்பான் - இந்தியா இணைந்தால் புதிய தொழிற்புரட்சி: டோக்கியோ மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை

டோக்கியோ: ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்தால், 21-ம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று டோக்கியோவில் நடைபெற்ற இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 15-வது இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு அதிகமாக முதலீடு செய்துள்ளன. 80 சதவீத ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை விரிவுபடுத்த விரும்புகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow