சொர்க்கவாசல் உருவான கதை: அசுரர்களுக்கும் அருள்பாலித்த பெருமாள்!

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.

Dec 31, 2024 - 17:50
 0  4
சொர்க்கவாசல் உருவான கதை: அசுரர்களுக்கும் அருள்பாலித்த பெருமாள்!

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால், விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரால் மட்டுமே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட்டனர். இதனால், பெருமாள் மது, கைடபருடன் போர் புரிந்தார்.

ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால், எங்களுக்கு நீங்கள் கருணை காட்டவேண்டும் என பணிவாகக் கூறி, வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow