காசிக்கு செல்ல முடியாதவர்கள் விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் வழிபடலாம்!
மதுரை அருகே உள்ள விளாச்சேரியில், சுமார் 600 ஆண்டுகள் பழமையான காசிவிஸ்வநாதர்- காசி விசாலாட்சி கோயில் அமைந்துள்ளது. புண்ணியம் தேடி காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபட்டால் புண்ணியமும்,

மதுரை அருகே உள்ள விளாச்சேரியில், சுமார் 600 ஆண்டுகள் பழமையான காசிவிஸ்வநாதர்- காசி விசாலாட்சி கோயில் அமைந்துள்ளது. புண்ணியம் தேடி காசிக்குச் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபட்டால் புண்ணியமும், முக்தியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் விளா பூஜைக்கு விளாமரங்கள் நிறைந்த இந்த ஊரில் இருந்துதான் நெல் கொண்டு சென்றதால், விளாச்சேரி என்ற பெயர் பெற்றது. இந்த ஊரில்தான் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்தார். தமிழக அரசு சார்பில் அவருக்கு நினைவு இல்லமும் அமைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?