சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், சேலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த சேர சிற்றரசர்கள், அந்தக் கோட்டையில் பெரிய மாரியம்மனை பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வந்தனர்.

சேலம் மாநகரின் மையத்தில், திருமணிமுத்தாற்றின் கரையின் மீது கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், சேலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த சேர சிற்றரசர்கள், அந்தக் கோட்டையில் பெரிய மாரியம்மனை பிரதிஷ்டை செய்து, வழிபட்டு வந்தனர்.
அன்று முதல் சேலத்தின் காவல் தெய்வமாக, கோட்டை பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
கோட்டை பெரிய மாரியம்மன், தனது சிரசில் அக்னி சுவாலையால் ஒளி வீசும் கிரீடத்தை அணிந்து, தனது நாற்கரங்களில் நாக உடுக்கை, பாசாங்குசம், திரிசூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி, கம்பீரமாக வீற்றிருக்கிறாள்.
What's Your Reaction?