சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது

கண்காளி அறக்கட்டளை சார்பில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கி செப். 1-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனிதநேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள ‘மை பங்களா’ வில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு, கண்காளி அறக்கட்டளை தலைவர் எஸ்.பீனா உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், சாரதா மடத்தின் துறவி மாதாஜி பிரவ்ராஜிகா தர்மாத்மா ப்ரானா, பல்வேறு துறைகளை சேர்ந்த பெண் தொழில் முனைவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?