பள்ளியில் 38 ஆண்டு மணி அடித்த ஊழியருக்கு பிரியாவிடை!
பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பள்ளியில் தனது தொடக்க கல்வியை பயின்றது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தப் பள்ளியில் தனது தொடக்க கல்வியை பயின்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பள்ளியில் தாஸ் (60) என்பவர் கடந்த 38 ஆண்டுகளாக மணி அடிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். எலக்ட்ரிக் மணி அறிமுகமான பிறகும் இந்தப் பள்ளியில், பழைய மணி அடிக்கும் முறையே தொடர்ந்தது. மணி அடிக்கும் ஊழியரான தாஸ் நேரத்தை துல்லியமாகப் பார்த்து, 38 ஆண்டுகளும் நேர்த்தியாக தனது பணியை செய்து வந்தார்.
What's Your Reaction?