வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோயை தடுக்கலாம்: பொது சுகாதார துறை இயக்குநர் அறிவுரை
நமது வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும் என்றுதமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறைஇயக்குநர் டி

சென்னை: நமது வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும் என்றுதமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறைஇயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக சுகாதார அமைப்பு ஆய்வின்படி, ஆண்டுதோறும் சுமார்1.70 கோடி பேர்மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய் உள்ளிட்ட இதய நோய்களால் உயிரிழக்கின்றனர். குறிப்பாக, இளம் வயதினருக்கும் இதய நோய் பாதிப்புஅதிகரித்து வருகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சமம்.
What's Your Reaction?