சென்செக்ஸ் 1,960 புள்ளிகள் உயர்வு - அதானி பங்குகள் நிலை என்ன?

மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் 1,960 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தன. அதானி நிறுவனப் பங்குகளும் மீண்டு வருகின்றன.

Nov 22, 2024 - 18:50
 0  6
சென்செக்ஸ் 1,960 புள்ளிகள் உயர்வு - அதானி பங்குகள் நிலை என்ன?

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் 1,960 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தன. அதானி நிறுவனப் பங்குகளும் மீண்டு வருகின்றன.

அமெரிக்கா வெளியிட்ட வேலைவாய்ப்பு குறித்த சாதகமான தரவுகள் பங்குச் சந்தை எழுச்சி காண பெரிதும் உதவின. அமெரிக்காவிலிருந்து அதிக வருவாய் ஈட்டும் ஐடி துறையைச் சேர்ந்த பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டிசிஎஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, எல் அண் டி , எஸ்பிஐ பங்குகளின் விலை அதிகரித்ததால் சென்செக்ஸ் 1,150 புள்ளிகள் ஏற்றம் பெற உதவியது. பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக், மஹிந்திரா, பாஜஜ் பைனான்ஸ் பங்குகளையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow