சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.

Apr 7, 2025 - 18:30
 0  3
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.

உஜ்வாலா மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்கள் என இரு தரப்புக்கும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.503-ல் இருந்து ரூ.553 ஆகவும், பொது பயனர்களுக்கு ரூ.803-ல் இருந்து ரூ.853 ஆகவும் அதிகரிக்கும். இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. எனினும், சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விலைக் குறைப்புக்கு ஏற்ப இந்த அதிகரிப்பு சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow