இந்திய பொருளாதாரம் எதையும் தாங்கும்; ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

Oct 4, 2025 - 07:30
 0  5
இந்திய பொருளாதாரம் எதையும் தாங்கும்; ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற கவுடில்யா பொருளா​தார மாநாட்​டில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: உலகளா​விய பிரச்​சினை​கள் எல்​லாம் தீவிரம் அடைந்து வரு​கின்​றன. வரி விதிப்​பு​கள், தடைகள், பிரிக்​கும் யுக்​தி​கள் எல்​லாம் உலகளா​விய நுகர்வு சங்​கி​லியை மாற்​றியமைக்​கின்​றன. இந்த மாற்​றங்​கள் இந்​தி​யா​வின் பலவீனம் மற்​றும் வலிமை ஆகிய இரண்​டை​யும் வெளிப்​படுத்​துகிறது. மாற்​றங்​கள் மற்​றும் அதிர்​வு​களை தாங்​கும் திறனை வரவேற்​கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow