சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழிபாட்டுக்காக சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, பக்​தர்​களுக்கு நெற்​க​திர்கள் பிர​சாதமாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழிபாடு​களுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்தப்பட்​டது.

Jul 31, 2025 - 06:10
 0  15
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாட்​டுக்​காக சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, பக்​தர்​களுக்கு நெற்​க​திர்​கள் பிர​சாதமாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்​தப்​பட்​டது. ஒவ்​வொரு ஆண்​டும் நெல் அறு​வடை தொடங்​கும் காலங்​களில் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாடு நடை​பெறுவது வழக்​கம்.

இந்த ஆண்​டுக்கான பூஜை நேற்று நடை​பெற்​றது. இதற்​காக, அலங்​கரிக்​கப்​பட்ட வாகனங்​களில் நேற்று முன்​தினம் நெற்க​திர்​கள் கொண்​டு​வரப்​பட்​டன. பம்பை கணபதி கோயி​லில் சிறப்பு வழி​பாட்டுக்குப் பிறகு 18-ம் படி வழியே ஐயப்​பன் சந்​நி​திக்கு தலைச்​சுமை​யாகக் கொண்டு வரப்​பட்​டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow