கந்த சஷ்டி திருவிழா: கழுகுமலை கோயிலில் நடந்த தாரகாசூரன் சம்ஹாரம்!

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வெற்றி வேல், வீரவேல் கோஷங்களுக்கு இடையே தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. நாளை மாலை இங்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

Nov 11, 2024 - 15:43
 0  3
கந்த சஷ்டி திருவிழா: கழுகுமலை கோயிலில் நடந்த தாரகாசூரன் சம்ஹாரம்!

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வெற்றி வேல், வீரவேல் கோஷங்களுக்கு இடையே தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. நாளை மாலை இங்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

பிரசித்திபெற்ற குடைவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், 5-ம் நாளான இன்று தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சந்தி கால பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, தூது சென்ற வீரபாகுவை சூரர்கள் சிறைபிடித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow