மதுரை வந்த கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு - எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள்

மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிருந்து நேற்று மாலையில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர். 

May 11, 2025 - 15:55
 0  12
மதுரை வந்த கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு - எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள்

மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிருந்து நேற்று மாலையில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி தண்ணீர் பீய்ச்சி அடித்து பக்தர்கள் வரவேற்றனர்.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 8-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தோளுக்கினியானில் எழுந்தருளினார். மூன்றாம் நாளான நேற்று காலையில் தோளுக்கினியானில் சுந்தரராஜபெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow