சபரிமலை அப்டேட்: காட்டுப் பாதை, குளிர் பாதித்தால் 24X7 இலவச ஆயுர்வேத சிகிச்சை வசதி!
கற்பாறைகள் நிறைந்த காட்டுப்பாதை, அதீத குளிரில் நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிலருக்கு உடல்நிலை வெகுவாய் பாதிக்கப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சன்னிதானத்தில் 24 மணி நேரமும் ஆயுர்வேத இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தேனி: கற்பாறைகள் நிறைந்த காட்டுப்பாதை, அதீத குளிரில் நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் சிலருக்கு உடல்நிலை வெகுவாய் பாதிக்கப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சன்னிதானத்தில் 24 மணி நேரமும் ஆயுர்வேத இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக பக்தர்கள் பலரும் வாகனங்களில் பம்பை வந்து பின்பு அங்கிருந்து மரக்கூட்டம், நீலிமேலை, சரங்கொத்தி, அப்பாச்சிமேடு படிப்பாதை வழியே பெரியநடைப் பந்தலை சென்றடைகின்றனர். பாதயாத்திரை பக்தர்களைப் பொறுத்தளவில் சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சன்னிதானத்தை வந்தடைகின்றனர். இருப்பினும் சபரிமலைக்கு பெரிய பாதை எனப்படுவது எருமேலி வனப் பாதையே ஆகும்.
What's Your Reaction?