பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது தாக்குதல்: 38 பேர் பலி, 29 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 2 பயணிகள் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 2 பயணிகள் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவரில் இருந்து பராசினார் நகருக்குச் சென்ற ஒரு பயணிகள் வாகனத்தின் மீதும், பராசினாரில் இருந்து பெஷாவர் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு பயணிகள் வாகனத்தின் மீதும் குர்ரம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?