குற்றம் முடிவடையும் இடம்! | லாரா - திரைப் பார்வை
கதாபாத்திரங்களின் குற்றப் பின்புலத்தை ஆராயும் புலன் விசாரணைப் படங்களில், அவற்றின் வாழிடமும் அங்குள்ள கலாச்சார வாழ்வும் முக்கியத்துவம் பெறும்போது, அது நம்பகம் எனும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

கதாபாத்திரங்களின் குற்றப் பின்புலத்தை ஆராயும் புலன் விசாரணைப் படங்களில், அவற்றின் வாழிடமும் அங்குள்ள கலாச்சார வாழ்வும் முக்கியத்துவம் பெறும்போது, அது நம்பகம் எனும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. மணி மூர்த்தி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘லாரா’ இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சுவாரஸ்யம் கூட்டும் திரை அனுபவத்தைத் தருகிறது.
ஒரு பெண்ணின் சடலம் காரைக் கால் கடற்கரையில் ஒதுங்குகிறது. கொலையா, தற்கொலையா என உடற்கூறாய்வில் கூட கண்டறிய முடியாதபடி சிதைந்து கரை ஒதுங்கிய அதனைக் கொண்டு, தன் நிலையத்துக்கு வரும் ஒரு ‘மிஸ்சிங் கேஸ்’ வழக்கைத் துருவத் தொடங்குகிறார் நிலைய ஆய்வாளர்.
What's Your Reaction?