காகித கவர்களில் மருந்துகள் வழங்கும் முறை - சேலம் மருத்துவமனையில் வரவேற்பு!
சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயர் சிகிச்சை பெற வேண்டி வருகின்றனர்.

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் காகித கவர்களில் மருந்துகள் வழங்கும் முறை புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு நோயாளிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் புற நோயாளிகள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயர் சிகிச்சை பெற வேண்டி வருகின்றனர்.
What's Your Reaction?