ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா
மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

திருமலை: மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேரின் உச்சியில் சவர தொழிலாளர்கள் வழங்கும் தங்க குடைதான் அமைக்கப்படுகிறது. அதன் கீழ்தான் உற்சவ மூர்த்திகள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கைங்கர்யங்களை உற்று நோக்கினால், ஜாதி, மதம் என்பது பெருமாளுக்கு கிடையாது என்பதை நாம் நன்கு அறிய முடியும். பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவைக்கு முன், கோயில் திறந்ததும் முதல் தரிசனம் யாதவ குலத்தவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது.
What's Your Reaction?