பழநி திருஆவினன்குடி கோயிலில் கோலாகலமாக நடந்த முகூர்த்தக்கால் நடும் விழா

குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. 

Nov 5, 2025 - 13:55
 0  4
பழநி திருஆவினன்குடி கோயிலில் கோலாகலமாக நடந்த முகூர்த்தக்கால் நடும் விழா

பழநி: குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகன் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால், பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலே மூன்றாம் படை வீடாகும். குழந்தை முருகனை மகாலட்சுமி (திரு),கோமாதா (ஆ), சூரியன் (இனன்), பூமாதேவி (கு),அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இங்கு முருகன் குழந்தை வடிவில் மயில் மீது ஆமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow