எனக்கு ஏன் நான்கு கால்கள் இல்லை? | கதை
எனவே குருவிக்குஞ்சு தன் கூடு இருந்த மரத்தின் அருகிலேயே பறக்கும். ஆங்காங்கே மரக்கிளைகளில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துப் பொழுதைப் போக்கும். மாலைப் பொழுதில் மீண்டும் தன் கூட்டிற்குத் திரும்பிவிடும்.

புங்க மரக்கிளையில் சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி, ஒரே ஒரு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. குருவிக்குஞ்சு சற்று வளர்ந்து பறக்கவும் கற்றுக்கொண்டது. ஆனாலும் தாய்க்குருவி குஞ்சிடம், ‘நீ கூட்டைவிட்டு வெகுதூரம் பறந்து செல்ல வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாட்கள் போன பிறகு நீ விருப்பப்பட்ட இடத்திற்குப் பறந்து போகலாம்’ என்று சொல்லி இருந்தது.
எனவே குருவிக்குஞ்சு தன் கூடு இருந்த மரத்தின் அருகிலேயே பறக்கும். ஆங்காங்கே மரக்கிளைகளில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துப் பொழுதைப் போக்கும். மாலைப் பொழுதில் மீண்டும் தன் கூட்டிற்குத் திரும்பிவிடும். ஒரு நாள் சிலந்தி ஒன்று இரண்டு மரக்கிளை களுக்குத் தாவிக்கொண்டிருந்தது. அது தன் வாயிலிருந்து சுரக்கும் ஒரு பசையைக் கொண்டு பெரிய வலை பின்னுவதைக் குருவிக்குஞ்சு பார்த்தது.
What's Your Reaction?