உணவு சுற்றுலா: கேரளத்து குலுக்கி சர்பத்
முகலாயர்களால் சர்பத் ரகங்கள் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தாலும், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருந்திருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு வெப்ப மண்டலப் பகுதியான நம் நாட்டில் பிரபலம் அடைந்தன சர்பத் ரகங்கள்.

முகலாயர்களால் சர்பத் ரகங்கள் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தாலும், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு நாடுகளில் பிரபலமாக இருந்திருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு வெப்ப மண்டலப் பகுதியான நம் நாட்டில் பிரபலம் அடைந்தன சர்பத் ரகங்கள்.
பன்னாட்டுக் குளிர்பானங்களின் ஆதிக்கம் தொடங்காத காலம்வரை, ஊர் முழுவதும் சர்பத் கடைகள் நிறைந்திருந்தன. தாகத்தில் இருக்கும்போது எலுமிச்சையும் நன்னாரியும் சேர்த்த சர்பத் அனைவருக்கும் விருப்பமானது.கேரளத்தின் கொல்லம் பகுதியில் தனித்துவமான ’குலுக்கி சர்பத்’ பிரபலமாக இருந்தது. மண் பானைகளும் மண் டம்ளர்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நயம் கடைக்குப் பாரம்பரிய அமைப்பைக் கொடுத்தன. அந்தக் கடை வைத்திருந்த பெண்மணியிடம் விசாரித்தோம்.
What's Your Reaction?