ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வுக்காக தலைமன்னார் - ராமேசுவரம் கடலை நீந்தி கடந்த சிறுவர்
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து ராமேசுவரம் வரையிலான பாக் ஜலசந்தி கடலை லக்ஷய் என்ற சிறுவர் புதன்கிழமை நீந்தி கடந்தார்.

ராமேசுவரம்: ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து ராமேசுவரம் வரையிலான பாக் ஜலசந்தி கடலை லக்ஷய் என்ற சிறுவர் புதன்கிழமை நீந்தி கடந்தார்.
சென்னை - துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் லக்ஷய் (12). இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் நீச்சல் பயிற்சியில் கைத்தேர்ந்தவர். பல்வேறு நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
What's Your Reaction?