16-ம் நூற்றாண்டை சேர்ந்த தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்
திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் உள்ள சிற்பங்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய, நாயக்கர் மன்னர்களால் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டது.

திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் உள்ள சிற்பங்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய, நாயக்கர் மன்னர்களால் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டது.
முதன்முதலாக பாண்டிய மன்னர் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டு திருப்பணி நடந்துள்ளது. தொடர்ந்து வந்த நாயக்க மன்னர்களும் கோயிலை மேலும் சீரமைத்து திருப் பணிகளை செய்துள்ளனர். தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில் குடகனாறு அருகே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கோயிலில் கலைநயமிக்க சிற்பங்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை 16 -ம் நூற்றாண்டு கோயில் என்பதற்கு ஆதாரமாக உள்ளன.
What's Your Reaction?