பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகுக்கும் கணவாய் தர்மசாஸ்தா!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர்க்காவல் தெய்வமாக போற்றப்படும் இந்த அய்யனார் கோயில் வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. ஊர்க்காவல் தெய்வமாக போற்றப்படும் இந்த அய்யனார் கோயில் வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஆரம்பத்தில் ஒத்தையடிப் பாதையாகவும், ஒருவழிப் பாதையாகவும் இச்சாலை இருந்தது. பளு ஏற்றிய வண்டிகளை இழுப்பதில் மாடுகளுக்கு பெரும் சிரமம் இருந்தது. எனவே, இக்கோயில் பகுதிக்கு வந்ததும் மாடுகளுக்கு ஓய்வு அளிப்பர். தாங்களும் களைப்பாறிய பிறகே மீண்டும் பயணத்தைத் தொடர்வர். இதனால், இக்கோயில் ஆரம்பத்தில் வண்டி சாஸ்தா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க பலரும் நாணயங்களை காணிக்கையாக வழங்கி விட்டுச் சென்றனர்.
What's Your Reaction?