வேலூரில் கோலாகலமாகத் தொடங்கிய ‘மகளிர் திருவிழா’!

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் இந்த ஆண்டுக்கான முதல் மகளிர் திருவிழா வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.02) அன்று கோலாகலமாக நடைபெற்றது. 

Feb 9, 2025 - 12:25
 0  3
வேலூரில் கோலாகலமாகத் தொடங்கிய ‘மகளிர் திருவிழா’!

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் இந்த ஆண்டுக்கான முதல் மகளிர் திருவிழா வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.02) அன்று கோலாகலமாக நடைபெற்றது.

வேலூர் நலம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நர்மதா அசோக்குமார் பேசும்போது, “35 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த புரிதல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதவிடாய்ச் சுழற்சி முடிந்த ஐந்து நாள்களுக்குப் பிறகு கண்ணாடி முன்பாக நின்று நீங்களே மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இது தொடர்பாக நிறைய வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன. இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் கருப்பைவாய்ப் புற்று நோயின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். எனவே, பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதற்கான பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow