பாதை வகுத்த பராசக்தி | கண் விழித்த சினிமா 36
அண்ணாவின் ‘நல்ல தம்பி’ (1949), ‘வேலைக்காரி’ (1949), ‘ஓர் இரவு’ (1951) ஆகிய மூன்று படங்களும் உருவாக்கிய கருத்தாழம் மிக்க கலகம், மு.கருணாநிதியின் கதை, வசனத்தில், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ (1952) படத்தின் மூலம் தீவிரம் அடைந்தது.

அண்ணாவின் ‘நல்ல தம்பி’ (1949), ‘வேலைக்காரி’ (1949), ‘ஓர் இரவு’ (1951) ஆகிய மூன்று படங்களும் உருவாக்கிய கருத்தாழம் மிக்க கலகம், மு.கருணாநிதியின் கதை, வசனத்தில், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ (1952) படத்தின் மூலம் தீவிரம் அடைந்தது.
அரசியல், சமூக, பண்பாட்டுத் தளத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, ஆட்சி மாற்றத்தை மறை முகமாகக் கோரிய இப்படம், தமிழ்த் திரையுலகின் பாதையை, ‘பராசக்தி’க்கு முன் - பராசக்திக்குப் பின்’ என வலுவாகத் திசைதிருப்பியது. இதன் பின்னர் திரைப்படங்களில் சமூக விமர்சனம், பகுத்தறிவுப் பார்வை என்பது தவிர்க்க முடியாத அம்சமாக மாறிப்போனது.
What's Your Reaction?