வேண்டும் வரம் அருளும் ஆனந்தேஸ்வர விநாயகர்!
மதுரை எல்லீஸ் நகரிலுள்ள ஆனந்தேஸ்வர விநாயகர் பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்பாலித்து வருகிறார்.

மதுரை எல்லீஸ் நகரிலுள்ள ஆனந்தேஸ்வர விநாயகர் பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்பாலித்து வருகிறார். எல்லீஸ் நகர் யமுனா வீதியில் ஆனந்தேஸ்வர விநாயகர் கோயில் 1988-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி ஸ்தாபிக்கப்பட்டது. முதலில் விநாயகருடன் மட்டும் ஸ்தாபிக்கப்பட்ட இக்கோயில், பின்னர் முருகப்பெருமான், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கு தனி சன்னதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு விநாயகரின் உருவம் சற்று சுதை சிற்பம் போன்று சுயம்புவாக தோன்றிய தோற்றத்தில் அமைந்துள்ளது.
விநாயகரின் உருவம் அவ்வளவாக தீக்ஷண்யமாக இல்லாமல் அமைந்துள்ளது. இது ‘உருவமற்ற ஒரு பொருள் உருவத்தை அடைகிறது; அதே பொருள் அருவமாகவும் திகழ்கிறது’ என்ற விநாயகரின் அடிப்படைத் தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. ஆலயத்தில் பிரதான முர்த்திகளாக ஆனந்தேஸ்வர விநாயகர், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் உள்ளனர்.
What's Your Reaction?