விண்ணைப் பிளந்த ‘அரோகரா’ முழக்கம்: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

Nov 11, 2024 - 15:43
 0  5
விண்ணைப் பிளந்த ‘அரோகரா’ முழக்கம்: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

கந்தசஷ்டி விழா: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow