சென்னையில் இருந்து ஷீரடிக்கு சிறப்புச் சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு
சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு சிறப்பு சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன

சென்னை: சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு சிறப்புச் சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில், சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு விமான சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணம் நவ.14ம் தேதி தொடங்குகிறது. 2 நாட்கள் சுற்றுலாப் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.19,950 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?