விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம்

கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் நேற்று விஜயதசமி விழாவையொட்டி, தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்திருந்த பெற்றோர், நெல்மணிகளைப் பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வழிபாடு நடத்தினர்.

Nov 11, 2024 - 15:43
 0  4
விஜயதசமியை முன்னிட்டு கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம்

திருவாரூர்: கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் நேற்று விஜயதசமி விழாவையொட்டி, தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்திருந்த பெற்றோர், நெல்மணிகளைப் பரப்பி, அதில் குழந்தைகளை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வழிபாடு நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற தலமான இங்கு ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமரிசையாக நடைபெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow