குணசீலம் பெருமாள் கோயில் தேரோட்டம்
குணசீலம் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாதகடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்

திருச்சி: குணசீலம் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாதகடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம் குணசீலம் வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ விழாகடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அனுமன் வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளி கருட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, பிரகாரத்தை வலம் வந்தார்.
What's Your Reaction?