ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்: அம்மன் கோயில்களில் ஏராளமானோர் வழிபாடு
சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிந்து நேற்று ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். புதிய தாலி மாற்றிக்கொண்டு வழிபாடு செய்தனர்.

சென்னை: சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிந்து நேற்று ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். புதிய தாலி மாற்றிக்கொண்டு வழிபாடு செய்தனர்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. நீர்வளம் பெருகி, பயிர்கள் செழிக்க வேண்டும், மக்கள் வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் இந்த நாளில் பூஜை செய்து வழிபடுவார்கள்.
What's Your Reaction?