நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
நெல்லையில் நேற்று நெல்லையப்பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

திருநெல்வேலி: நெல்லையில் நேற்று நெல்லையப்பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் கடந்த 30-ம் தேதி ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 8-ம் நாளான நேற்றுமுன் தினம் காலை நடராஜப் பெருமாள் திருவீதி உலா, மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலா, இரவு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதிஉலா நடைபெற்றது.
What's Your Reaction?