வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு செருப்பு மாலை - தேர்தல் முறைகேடு புகாரில் கைது

வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுடா, தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்து வெளியே இழுத்து வந்தனர்.

Jun 23, 2025 - 17:05
 0  4
வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு செருப்பு மாலை - தேர்தல் முறைகேடு புகாரில் கைது

டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்து வெளியே இழுத்து வந்தனர்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா உள்பட 18 பேர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தொடர்ந்த வழக்கில் நூருல் ஹுடா கைது செய்யப்பட்டதாக டாக்கா பெருநகர காவல் துறையின் துணை ஆணையர் மொஹிதுல் இஸ்லாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow