ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் அபராதம்: விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை
பங்குச் சந்தை விதிகளை மீறியதாகக் கூறி ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு செபி ரூ.9 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மும்பை: பங்குச் சந்தை விதிகளை மீறியதாகக் கூறி ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு செபி ரூ.9 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் (ஆர்எஸ்எல்) பங்குத் தரகு சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஆர்எஸ்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் கணக்குகள், பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களை தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
What's Your Reaction?