யேசுவின் முதன்மைச் சீடர் - புனித பீட்டர் | கல்லறைக் கதைகள் 17

ரோமில் இருந்தவர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றியதால் கோபமடைந்த பேரரசன் நீரோ, புனித பீட்டரைத் தலைகீழாகச் சிலுவையில் அறைந்து கொன்றான். பீட்டர், வாடிகன் குன்றுப் பகுதியில்  இறந்ததால் அப்பகுதியிலேயே அவருடைய உடலைக் கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்தார்கள்.

Dec 30, 2024 - 17:20
 0  4
யேசுவின் முதன்மைச் சீடர் - புனித பீட்டர் | கல்லறைக் கதைகள் 17

து 1942ஆம் ஆண்டு. வாடிகனில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயம். இப்போதைய பெயர் செயின்ட் பீட்டர் தேவாலயம். மொன்சிக்னோர் லூட்விக் காஸ் என்கிற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தலைமையில் ஆராய்ச்சிக் குழுவினர் அந்தத் தேவாலயத்தின் அடித்தளத்துக்குக் கீழே அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு கல்லறை தென்பட்டது. அதைத் திறந்து பார்த்தபோது, அதில் மனித எலும்பின் சில பகுதிகள் இருந்தன. இறந்தவருக்குத் தகுந்த மரியாதை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில், அந்த எலும்புச் சிதைவை ஒரு பெட்டியில் போட்டு, மற்றோர் இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டார். இந்த விஷயத்தை அவர் அகழாய்வுக் குழுவினரிடமும் தெரிவிக்கவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow