மேலக்கொடுமலூர் குமரையாவுக்கு பதிகம் பாடிய இசுலாமிய புலவர்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில் அமைந்துள்ளது. மேலகொடுமலூர் என்றால் வலிமைமிக்க முழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர் என்று அர்த்தம்.

Jan 7, 2025 - 18:30
 0  3
மேலக்கொடுமலூர் குமரையாவுக்கு பதிகம் பாடிய இசுலாமிய புலவர்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோயில் அமைந்துள்ளது. மேலகொடுமலூர் என்றால் வலிமைமிக்க முழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர் என்று அர்த்தம். அதாவது, முருகப்பெருமான் அசுரனை மழு என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும்பும் வழியில் வனப்பகுதியில் வளர்ந்திருந்த உடை மரம் ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த வனத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள், முருகப்பெருமானைக் கண்டு வணங்கினர். அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகப்பெருமான் நின்று அருளாசி வழங்கினார் என்பது இந்த கோயிலின் ஸ்தல வரலாறு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow