மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப் பெருக்குக்கு மறுநாள் 19-ம் தேதியன்று, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம்.

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்குக்கு மறுநாள் 19-ம் தேதியன்று, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவையொட்டி காவிரி ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் தீர்த்தம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு அம்மன் காவிரி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந் தருளினார். நேற்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு வரிசையாக அமர்ந்திருந்தனர்.
What's Your Reaction?