சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவுகள் தீவிரம்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 16-ம் தேதி நடை திறக்கப்படுவதையொட்டி தரிசனத்​துக்​காக பக்​தர்​கள் ஆன்லைனில் மும்முர​மாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.

Aug 5, 2025 - 05:45
 0  13
சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவுகள் தீவிரம்

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 16-ம் தேதி நடை திறக்​கப்​படு​வதையொட்டி தரிசனத்​துக்​காக பக்​தர்​கள் ஆன்​லைனில் மும்முர​மாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி பூஜைக்​காக கடந்த 29-ம் தேதி நடை திறக்​கப்​பட்​டது. பின்பு 30-ம் தேதி ஒரு ​நாள் சிறப்பு வழி​பாடு நடத்தப்பட்டது.

இதில் புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு நடை சாத்​தப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow