மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mar 29, 2025 - 21:25
 0  5
மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும்” என்று மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow